ராமநாதபுரத்தில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த காதலி, நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தற்போது புத்தாண்டை முன்னிட்டு தனது காதலனுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து உள்ளனர். அப்போது, திடீரென அங்கு 4 பேர் வந்துள்ளனர்.
தொடர்ந்து அவர்கள், இங்கு என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்டு, காதலர்களை மிரட்டியது மட்டுமல்லாமல் அவர்களை தாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, காதலனை அங்கிருந்து அவர்கள் விரட்டி உள்ளனர். பின்னர், இளம்பெண்ணை அங்கு இருந்த மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று, நான்கு பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கிருந்து 4 பேரும் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும், இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை உடன் விஜய்.. ஐகோர்ட் அனுமதி.. நடந்தது என்ன?
இதன் பேரில், புவனேஷ் குமார் (27), குட்டி (25), செல்வகுமார் (27) மற்றும் சரண் முருகன் (29) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் ஜனவரி 10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.