ராமநாதபுரத்தில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த காதலி, நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தற்போது புத்தாண்டை முன்னிட்டு தனது காதலனுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து உள்ளனர். அப்போது, திடீரென அங்கு 4 பேர் வந்துள்ளனர்.
தொடர்ந்து அவர்கள், இங்கு என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்டு, காதலர்களை மிரட்டியது மட்டுமல்லாமல் அவர்களை தாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, காதலனை அங்கிருந்து அவர்கள் விரட்டி உள்ளனர். பின்னர், இளம்பெண்ணை அங்கு இருந்த மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று, நான்கு பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கிருந்து 4 பேரும் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும், இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: அண்ணாமலை உடன் விஜய்.. ஐகோர்ட் அனுமதி.. நடந்தது என்ன?
இதன் பேரில், புவனேஷ் குமார் (27), குட்டி (25), செல்வகுமார் (27) மற்றும் சரண் முருகன் (29) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் ஜனவரி 10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.