தமிழகம்

பெற்றோரிடம் ஓடிப்போய் சொன்ன மகள்.. நள்ளிரவில் பள்ளியை சூறையாடிய உறவினர்கள்.. மணப்பாறையில் பரபரப்பு!

மணப்பாறை தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக தாளாளர் கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஒரு மாணவி 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், இம்மாணவிக்கு, பள்ளித் தாளாளரின் கணவர் வகுப்பறையிலேயே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர், இது குறித்து அந்த மாணவி, பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றவுடன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடனடியாக பள்ளிக்குச் சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

மேலும், வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து சேதப்படுத்தினர். அது மட்டுமல்லாமல், பள்ளித் தாளாளரின் கணவரைப் பிடித்து போலீசிலும் உறவினர்கள் ஒப்படைத்தனர். தொடர்ந்து, தாளாளர் மற்றும் பள்ளி முதல்வரைக் கைது செய்யக் கோரி திருச்சி – திண்டுக்கல் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து, திருச்சி எஸ்பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், “மாணவி பாலியல் சீண்டல் வழக்கு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவரை கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளியில் மாணவிகளுக்கு இதுபோன்று ஏற்படும் பாவியல் சீண்டல்கள் நடைபெறாமல் தடுத்திட, அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதையும் படிங்க: வயிறு வலியோடு அலறிய 9ஆம் வகுப்பு மாணவி.. ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மேலும், இதில் வேறு மாணவிகள் யாராவது பாதிக்கப்பட்டு உள்ளனரா என்றும் விசாரணை நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி, இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை மூட வேண்டும் என்று, பள்ளியை தொடர்ந்து செயல்படவிட மாட்டோம் என்றும் சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

கலங்கி நின்ற விவசாயி.. கூண்டோடு வந்த வனத்துறை.. கோவையில் தொடரும் சிறுத்தை அச்சம்!

கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…

21 minutes ago

வருங்கால CM புஸ்ஸி ஆனந்த்.. கைவிரித்த ECR சரவணன்.. நடந்தது என்ன?

’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…

1 hour ago

வரலாறு காணாத உச்சம்.. ஒரே நாளில் ரூ.840 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 28) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 105 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 340…

2 hours ago

பரிதவித்த சூப்பர் சிங்கர் போட்டியாளரின் அம்மா..ஓடி வந்த ‘ராகவா லாரன்ஸ்’..குவியும் பாராட்டு.!

கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…

15 hours ago

ரோஹித்,கோலிக்கு பிசிசிஐ கெடுபிடி…பறந்து வந்த அதிரடி உத்தரவு…!

சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…

16 hours ago

சல்மான் கானுடன் லிப் லாக்… தீயாய் பரவிய ராஷ்மிகா வீடியோ.. இறுதியில் டுவிஸ்ட்!

தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…

16 hours ago

This website uses cookies.