ஆந்திராவில் காதலனுடன் நெருக்கமாக இருந்த காதலியின் வீடியோவைக் காட்டி மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வைசாக்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் சட்டக் கல்லூரியில் 20 வயது மாணவி படித்து வருகிறார். இந்த நிலையில், திடீரென அந்த மாணவி தனது வீட்டில் தற்கொலை செய்ய முயன்று உள்ளார். ஆனால், அதிர்ஷ்டவசமாக இதனை தந்தை பார்த்ததால், அதிர்ச்சியடைந்து தனது மகளை காப்பாற்றி உள்ளார்.
பின்னர், தனது மகளிடம் விசாரித்த தந்தைக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. இதன்படி, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரும், இந்த மாணவியும் காதலித்து வந்து உள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்துப் பேசிய நிலையில், ஒருமுறை தனிமையில் உல்லாசமாக இருந்து உள்ளனர்.
இதனை அந்த இளைஞர் தனது செல்போனில் மாணவிக்கு தெரியாதபடி வீடியோவாக எடுத்து உள்ளார். பின்னர், அந்த வீடியோவை தனது நண்பர்கள் மூன்று பேரிடம் இளைஞர் காண்பித்து உள்ளார். அதனைப் பார்த்த நண்பர்கள், தாங்களும் மாணவி உடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என இளைஞரிடம் கூறி உள்ளனர்.
அதற்கு அந்த இளைஞரும் சம்மதம் தெரிவித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து, மாணவியை விசாகப்பட்டினத்தில் இருக்கும் கிருஷ்ணா நகரில் உள்ள தனது நண்பரின் அறைக்கு அந்த இளைஞர் அழைத்துச் சென்று உள்ளார். அங்கு முதலில் மாணவியும், இளைஞரும் உல்லாசமாக இருந்து உள்ளனர்.
இதையும் படிங்க: நயன்தாரா வீடியோ லீக்…படையெடுக்கும் ரசிகர்கள் ..!
இதனிடையே, இதனை இளைஞரின் நண்பர்கள் வீடியோ எடுத்து உள்ளனர். பின்னர், திடீரென அறைக்கு உள்ளே இளைஞரின் நண்பர்கள் வந்து உள்ளனர். இதனால் அம்மாணவி அதிர்ச்சி அடைந்து உள்ளார். பின்னர், அந்த வீடியோவைக் காட்டி மிரட்டி, நான்கு பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.
இந்த நிலையில் தான் மாணவி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து, இது குறித்து மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்து உள்ளார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இளைஞர் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.