தமிழகம்

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த அரசுப் பள்ளி ஊழியர்.. சிறார் பள்ளியில் கல்லூரி மாணவர்கள்!

நெல்லையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட சிறுவர்கள், அழைத்த நபரிடம் பணப் பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், புதுமணை பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அரசுப் பள்ளி ஒன்றில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். அப்போது இந்தப் பள்ளியில் படித்த சில மாணவர்களுடன் பாலமுருகன் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இவ்வாறு நன்கு பழகிய நான்கு மாணவர்கள், நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், குறிப்பிட்ட நான்கு மாணவர்களை ஓரினச் சேர்க்கைக்கு பாலமுருகன் அழைத்துள்ளதாகத் தெரிகிறது. இதன் பேரில் பாலமுருகனைப் பார்க்க வந்த நான்கு பேரும் சேர்ந்து, ஐந்து பேராக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளனர். இதனை பாலமுருகனுக்கே தெரியாமல் அந்த சிறுவர்கள் வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர்.

பின்னர், இச்செயலில் ஈடுபட்ட பிறகு சிறிது நாட்கள் கழித்து பாலமுருகனுக்கு அந்த வீடியோக்களை அனுப்பி மிரட்டும் வேலையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அவ்வப்போது பாலமுருகனை மிரட்டி செல்போன், 10 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட பொருள் மற்றும் ரொக்கத்தையும் மாணவர்கள் அவ்வப்போது பெற்று வந்து உள்ளனர். இது ஒரு கட்டத்தில் உச்சம் அடைந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் பணம் கேட்டு பாலமுருகனை வற்புறுத்தி உள்ளனர்.

இதனால் பொறுத்துக் கொள்ள முடியாத பாலமுருகன், பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இந்தப் புகாரின் பேரில் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து, அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நாதக ஸ்லீப்பர் செல்கள்.. புது குண்டு போடும் சீமான்!

மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேநேரம், மாணவர்களை இவ்வாறு அழைத்துச் செல்லும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

11 hours ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

11 hours ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

12 hours ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

12 hours ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

13 hours ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

13 hours ago

This website uses cookies.