தமிழகம்

சிசிடிவி காட்சி வேண்டும்.. நிதியுதவியை உதறிய உறவினர்கள்.. விக்கிரவாண்டி குழந்தை பலியான விவகாரத்தில் பரபரப்பு!

விக்கிரவாண்டி அருகே பள்ளி செப்டிக் டேங்கில் குழந்தை பலியான சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என அவரது தாயார் கூறியுள்ளார்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் UKG படித்து வந்த 4 வயதான சிறுமி லியா லட்சுமி, நேற்று பள்ளி உணவு இடைவேளையின் போது, வளாகத்தில் இருந்த செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்து, குழந்தையின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும், உறவினர்களும் கேள்வி எழுப்பினர். எனவே, கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து பள்ளி ஊழியர்கள், குழந்தையை மீட்டு காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகளை பள்ளி நிர்வாகம் வெளியிட்டது.

இதனிடையே, உயிரிழந்த சிறுமியின் தந்தை பழனிவேல், இதுகுறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டொமில்லா மேரி, உயிரிழந்த குழந்தை லியா லட்சுமியின் வகுப்பு ஆசிரியை ஏஞ்சல் ஆகிய 3 பேரையும் இன்று அதிகாலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர், இன்று காலை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை லியா லட்சுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த குழந்தையின் பெற்றோரிடம் முதல்வர் அறிவித்த பொது நிவாரண நிதி ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

இதையும் படிங்க: அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.. கே.பாலகிருஷ்ணனுக்கு சேகர் பாபு திடுக் பதில்!

அப்போது முதலில் அதனை பெற்றுக் கொண்ட உறவினர்கள், அமைச்சர் பொன்முடி திரும்பிய உடனே அதனை உதறினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

13 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

14 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

14 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

14 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

14 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

14 hours ago

This website uses cookies.