போலி நகைகளை செய்து வைத்து 496 பவுன் மோசடி. திருப்பூரைச் சேர்ந்த வங்கி மேலாளர் கார்த்திக் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் சந்திரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர் கேரளா கண்ணூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இந்த நிலையில் வங்கியில் நடந்த தணிக்கையின் போலி நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள குற்றப்பிரிவு போலீசில் வங்கி சார்பில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் வங்கியில் மேலாளராக பணியாற்றிய கார்த்திக் 496 பவுன் நகையை எடுத்து திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகே உள்ள ஒரு தனியார் வங்கியில் 17 பேர் பெயர்களில் அடகு வைத்து பணம் பெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வங்கி மேலாளர் கார்த்திக்கை கைது செய்த குற்ற பிரிவு போலீசார் நேற்று அவரை அழைத்துக் கொண்டு திருப்பூர் வந்தனர். திருப்பூர் வங்கியில் அடகு வைத்திருந்த 496 பவுன் நகையையும் பறிமுதல் செய்து கேரளாவுக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக திருப்பூரில் உள்ள தனியாரவங்கி மேலாளரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.