பிரபல தனியார் நிதி நிறுவன ஊழியரின் பலே மோசடி.. வாடிக்கையாளர்கள் SHOCK : மனைவியுடன் தில்லு முல்லு!
வேலூர் ஓல்ட் டவுன் பகுதியை சேர்ந்தவர் ரஜினி இவர் வேலூர் காந்தி ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில்) வீடு கட்டுவதற்கு கடனுதவி வழங்கும் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கிய நபர்களிடம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை மற்றும் வட்டியை ரஜினி வசூல் செய்துள்ளார்.
அதில் 14 பேரிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 13 லட்சத்து 12 ஆயிரத்து 884 ரூபாயை வசூலித்து அதனை நிதி நிறுவனத்தில் செலுத்தவில்லை
இந்த நிலையில் அந்த 14 பேரிடமும் 5 மாதத்திற்கான பணத்தை வட்டியுடன் செலுத்தும் படி அதே நிதி நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் கூறியுள்ளனர்.
அப்பொழுது அவர்கள் அந்த பணத்தை ஏற்கனவே ரஜினி வசூல் செய்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து ஊழியர்கள் (முத்தூட் பைனான்ஸ்) நிதி நிறுவனம் மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: 3 பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனை : பதற்றத்தில் தலைநகரம்..!!
அதனை அடுத்து அவர் அங்குள்ள ஆவணங்களை சோதனை செய்த பொழுது 14 பேரிடமும் வசூலித்த பணத்தை ரஜினி செலுத்தாமல் மோசடி செய்தது தெரிய வந்தது
இதுகுறித்து முத்தூட் பைனான்ஸ் நிறுவன மேலாளர் கிரண் குமார், வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார் .அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் எஸ்பி மணிவண்ணன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்
குற்றப்பிரிவு டிஎஸ்பி சாரதி மேற்பார்வையில் ஆய்வாளர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் 14 பேரிடமும் வசூலித்த ரூபாய் 13 லட்சத்து 12 ஆயிரத்து 884 ரூபாயை நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் ரஜினி மோசடி செய்ததும் அதற்கு அவருடைய மனைவி பாக்கியலட்சுமி உடந்தையாக இருந்ததும் உறுதியானது.
இதனை அடுத்து மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.