ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 வது கொண்டை ஊசி வளைவில் நிலக்கரி பாரம் ஏற்றி வந்த லாரி பழுதடைந்து நின்றதால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் இம்மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம்.
கடந்த மாதம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் வாகனங்களை பண்ணாரி சோதனைசாவடியிலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை ஆசனூர் அருகே உள்ள காரப்பள்ளம் சோதனைச் சாவடியிலும் வனத்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு காலை 6 மணிக்கு திம்பம் மலைப்பாதை வழியாக அனுமதிக்கப்படுகிறது.
இதனால் திம்பம் மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடியிலிருந்து மைசூருக்கு நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது திம்பம் மலைப்பாதை 27 வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்ப முற்பட்ட போது எதிர்பாராத விதமாக லாரி பழுதடைந்து நின்றது.
இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலக் இடையே சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.