புதுச்சேரி : உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சாமிநாதன், புதுச்சேரியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் ஜி மற்றும் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட விரும்புவதாக தெரிவித்ததாகவும் மேலும் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அதிகப்படியான இடங்களில் பாஜக வேட்பாளர்களை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த போது பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டதாகவும் அதேபோல் சட்டமன்ற கூட்டணி வேறு, உள்ளாட்சி தேர்தல் வேறு என்றும் விளக்கம் அளித்தார்.
மேலும் 5 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்தார். (என்.ஆர்.காங்கிரஸ், பாஜக). உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து தேசிய தலைமையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனித்து போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளது என்றார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.