உறங்கி கொண்டிருந்த நண்பன் தலையில் ஒரே போடு.. சக நண்பர்களை ஷாக் ஆக வைத்த குற்றவாளி!

Author: Udayachandran RadhaKrishnan
7 அக்டோபர் 2024, 11:19 காலை
Murder
Quick Share

புதுவீடு கட்டி வந்த நண்பனை சக நண்பனே கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

வீடு கட்டி வரும் நிலையில் வீட்டின் மேற்பரப்பில் கூலிங் அட்டை (சீலிங்) அமைப்பதற்காக திண்டுக்கல் சேர்ந்த 4 இளைஞர்கள் பணிக்கு நேற்று இரவு வந்துள்ளனர்.

அப்போது திண்டுக்கல் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ்(27) என்பவரை விஜயன்(27) மது போதையில் மோகன்ராஜை இரும்பு ராடால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் விஜயன் செய்வது அறியாமல் பக்கத்து வீட்டிற்கு சென்று நடந்ததை கூறிய நிலையில் ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோகன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அடித்து கொலை செய்யப்பட்ட விஜயினை கைது செய்து ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் மோகன்ராஜ் விஜயன் ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டு போது சக நண்பர்கள் இருவரையும் அனுப்பி வைத்த நிலையில் பின்னர் உறங்கிக் கொண்டிருந்தபோது மோகன்ராஜைவை விஜயன் இரும்புராடல் அடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

  • Ari show மெரினாவில் நிகழ்ந்த மரணங்கள்.. இது மக்களுக்கான அரசு இல்லை : விசிக கொந்தளிப்பு!
  • Views: - 78

    0

    0