திருச்சி : பெண் சகவாசத்தால் வேன் ஓட்டுநர் வீட்டு வாசலில் குத்தி கொலை செய்த சக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் கக்கன் காலனி சேர்ந்த அசோகன் மகன் சக்திகுமார் (வயது 34) இவர் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இதே போல் திருவெறும்பூர் காமராஜர் நகர், சுருளி கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முத்துப்பாண்டி (வயது 32) இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே பெண் தொடர்பான தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சனையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துப்பாண்டி சக்திகுமாரின் வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த முத்துபாண்டி தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்திகுமாரை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சக்திகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சக்திகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து முத்துபாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.