Categories: தமிழகம்

சேமியா பாக்கெட்டில் இறந்து கிடந்த தவளை… சிக்கலில் அணில் சேமியா நிறுவனம் : உணவு பாதுகாப்புத்துறை அதிரடி ஆய்வு!!

சேமியா பாக்கெட்டில் இறந்து கிடந்த தவளை… சிக்கலில் அணில் சேமியா நிறுவனம் : உணவு பாதுகாப்புத்துறை அதிரடி ஆய்வு!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காடேரி அம்மன் நகரை சேர்ந்தவர் பூமிநாதன் (37) உணவகம் நடத்தி வருகிறார். இவர் தீபாவளி உணவு தயாரிப்பதற்காக தனது கடை அருகில் உள்ள ஆனந்தம் மளிகை கடையில் பிரபல உணவு பொருள் தயாரிப்பு நிறுவனமான
அணில் மார்க் கம்பெனி தயாரித்த சேமியா பாக்கெட் வாங்கி உள்ளார்.

இந்நிலையில், பாயாசம் செய்வதற்காக சேமியா பாக்கெட்டை பிரித்த போது, அந்த பாக்கெட்டுக்குள் இறந்த கிடந்த நீண்ட நாளான தவளை காய்ந்து போன நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்தார். தொடர்ந்து தேவகோட்டை பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு செய்தனர் .

இதையடுத்து அணில் சேமியா தயாரிக்கும் திண்டுக்கல்லில் உள்ள தயாரிப்பு கூடங்களில் ஆய்வு செய்ய திண்டுக்கல் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவு வந்ததை தொடர்ந்து.

இன்று திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, லாரன்ஸ், சரவணகுமார், ஜாபர் சாதிக், முருகன் ஆகியோர் கொண்ட உணவு பாதுகாப்பு துறை குழுவினரால் திண்டுக்கல்லில் EB காலனி, செட்டி நாயக்கன்பட்டி மேட்டுப்பட்டி சிட்கோ பாடியூர் லட்சுமணபுரம் உள்ளிட்ட 7 பகுதிகளில் இயங்கி வரும் அணில் உணவு பொருள் தயாரிப்பு கூடங்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

சேமியா தயாரிப்பு முறையினை ஆரம்பம் முதல் இறுதி கட்டம் வரை தீவிர ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புகார் தெரிவிக்கப்பட்ட பேட்ச் நம்பர் கொண்ட அணில் சேமியா பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்ததை ஆய்வு செய்துள்ளனர். இருப்பிலுள்ள சேமியா பாக்கெட்டுகளை தற்காலிகமாக விற்பனை செய்யக் கூடாது என்று தயாரிப்பாளருக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இருப்பு அறை தயாரிப்புக் கூடங்களில் பயன்படுத்தும் குடிநீர், பணியாளர்கள் தன் சுத்தம் பேணுதல், விநியோக அறை ஆகிய இடங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

பூச்சி வகையோ, ஊர்வன வகையோ தயாரிப்புக் கூடத்திற்கு வர ஏதுவான காரணங்கள் உள்ளதா என்று கண்டறியப்பட்டு ஒவ்வொரு தயாரிப்பு கூடங்களிலும் கண்டறியப்பட்ட குறைபாடுகளை சரி செய்ய உணவு பாதுகாப்பு சட்டம் 2006 பிரிவு 32ன் படி மேம்பாட்டு அறிவிப்பு வழங்கியுள்ளனர்.

ஒவ்வொரு தயாரிப்பு பொருளிலிருந்தும் சட்டம் சார்ந்த மற்றும் கண்காணிப்பு உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள கிண்டி உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கபெற்றவுடன் விற்பனைக்கு அனுப்பப்பட்ட புகாரிற்கு உள்ளான பேட்ச் எண் கொண்ட சேமியா பாக்கெட்டுகள், பொருட்களை திரும்பப் பெறுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தயாரிப்பாளர் மீது உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

15 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

16 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

16 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

17 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

17 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

17 hours ago

This website uses cookies.