பழனியில் சாலையோர பழ வியாபாரியை இரண்டு இளைஞர்கள் கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பழைய தாராபுரம் சாலையில் உள்ள சாமி தியேட்டர் அருகே வாழைப்பழ வியாபாரம் செய்து வருபவர் வெள்ளைச்சாமி. இவர் தினமும் மாலை வேளையில் தள்ளு வண்டியில் வாழைப்பழம் வைத்து வியாபாரம் செய்து வருவது வழக்கம். இந்நிலையில் வழகக்கம் போல திங்கள் கிழமை கிறிஸ்துமஸ் தினத்தன்று வியாபாரம் செய்து வந்துள்ளார்.
அப்போது, அதே பகுதியில் உள்ள தெரசம்மாள் காலணியை சேர்ந்த குழந்தை இயேசு மற்றும் சக்தி என்கிற இரண்டு இளைஞர்கள் இருவரும் அங்கு வந்தனர். அப்போது, அருகில் இருந்த டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த பழ வியாபாரி வெள்ளைச்சாமியிடம், குழந்தை இயேசு மற்றும் சக்தி ஆகிய இருவரும் தகராறு செய்தனர்.
தொடர்ந்து இரண்டு பேரும் சேர்ந்து வெள்ளைச்சாமியை தாக்கி, கீழே தள்ளிவிட்டு டீக்கடையில் இருந்த விறகு கட்டையை எடுத்து பழ வியாபாரி வெள்ளைச்சாமியின் தலையில் அடித்தனர். இதில் வெள்ளைச்சாமி மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது. இதையடுத்து தகராறில் ஈடுபட்ட இருவரும் தப்பி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி நகர போலீசார், படுகாயமடைந்த வெள்ளைச்சாமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அபப்குதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பழ வியாபாரியை தாக்கிவிட்டு தலைமறைவான குழந்தை இயேசு மற்றும் சக்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைதான இருவரும் வேலைக்கு செல்லாமல் அப்பகுதியில் அடிக்கடி ரவுடித்தனம் செய்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏழை பல வியாபாரியை கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
This website uses cookies.