Categories: தமிழகம்

நோட்டீஸ் அனுப்பியதால் விரக்தி.. மின்சார டவர் மீது ஏறி தேயிலை தோட்ட தொழிலாளி தற்கொலை மிரட்டல்!

நோட்டீஸ் அனுப்பியதால் விரக்தி.. மின்சார டவர் மீது ஏறி தேயிலை தோட்ட தொழிலாளி தற்கொலை மிரட்டல்!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள பாரீ ஆக்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் வீரமணி வயது 57 இவரது மனைவி ராணி.

நேற்று இவர் பணியின் போது அனைத்து தேயிலை நிறுவனமும் காலை பத்தரை மணி அளவில் தேநீர் வழங்குவது தொன்று தொட்டு உள்ள வழக்கம்.

நேற்று அவருக்கு தேநீர் வழங்கிய நிர்வாகத்திற்கு கைக்கூலியாக இருக்கும் தன்ராஜ் வயது 62 இவர் அதே பகுதியில் நிரந்தரப் பணியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர்.

இவரை நிர்வாகம் மீண்டும் பணிக்கு அமர்த்தி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தேநீர் வழங்க நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று இவர் மதியம் ஒரு மணி அளவில் தேநீர் வழங்கியதால் வீரமணி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்ட காரணத்தினால் தன்ராஜ் நிர்வாகத்தில் அவரை தவறுதலாக கூறியதன் பேரில் இன்று காலை அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இரண்டு நடவடிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டதாலும் நிர்வாகம் பல முறைஅவரை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படடதால் மன அழுத்தம்காரணமாக அவர் தேயிலை ஆலை அருகாமையில் உள்ள “high power” உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தர்ணாவில் ஈடுபட்டார்.

இதனை அறிந்த வால்பாறை காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் அவரை இறங்கச் சொல்லி வலியுறுத்தியும் இறங்க மறுத்து டவர் மீது ஒரு மணி நேரம் உட்கார்ந்துள்ளார்.

மேலும் படிக்க: பாலியல் குற்றவாளிக்காக ஓட்டு கேட்ட MODI, AMIT SHAH.. பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் வலியுறுத்தல்!

உடனடியாக சம்பந்தப்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர் நலவாரிய ஆணையாளரை வரவேண்டும் அப்போதுதான் கீழே இறங்குவேன் என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்பகுதியில் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை எவ்வளவு அறிவுறுத்தியும் அதைஏற்க மறுத்து மேலே யாரும் ஏறி வந்தால் மின்னழுத்த கம்பியை தொட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் அதிகாரிகள் என்ன செய்வது என்று திகைத்தனர். மனைவி கண் எதிரில் மின்கோபுரம் மீது நின்று இருப்பதைப் பார்த்த மனைவி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது

உடனடியாக தொழிலாளர் நல ஆணையாளர் பேச்சு வார்த்தைக்கு வந்த பின்னர் அவர் கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார் அதன் பின்னர் அவரை தீயணைப்பு வாகனத்தில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது/ இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!

சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…

19 minutes ago

கொஞ்சம் கூட யோசிக்கல.. மனைவியை கிணற்றில் தள்ளிய கணவன்… எதிர்பாரா டுவிஸ்ட்!

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…

1 hour ago

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

16 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

17 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

18 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

18 hours ago

This website uses cookies.