Categories: தமிழகம்

சிறுமி கொலைக்கு நீதி கேட்டு இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் : தனியார் பேருந்துகள் ஓடவில்லை..!!

சிறுமி கொலைக்கு நீதி கேட்டு இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் : தனியார் பேருந்துகள் ஓடவில்லை..!!

புதுச்சேரி சோலைநகரை சேர்ந்த 9-வயது சிறுமி தனது வீட்டின் முன் கடந்த 2-ந்தேதி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானாள். அவளை தேடியும் கண்டுபிடிக்க முடியாதநிலையில் பெற்றோர் முத்தியால்பேட்டை போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிறுமியை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் கடைசியாக சிறுமி நடந்து செல்வது போன்ற ஒரே ஒரு பதிவு மட்டுமே பதிவாகி இருந்தது. அதை வைத்து சிறுமி வெளியில் செல்லவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். தொடர்ந்து தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், 4 நாட்களுக்கு பின் மாணவியின் உடல் அவளது வீட்டின் அருகே சுமார் 100 அடி தூரத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக கஞ்சா வாலிபரான கருணாஸ் (வயது19), விவேகானந்தன் (57) ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொடூரமாக கொன்று சாக்கடை கால்வாயில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கொலையான சிறுமியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி பொதுமக்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் புதுவையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், 9-வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், சிறுமியின் சாவுக்கு நீதி கேட்டும் மற்றும் போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இண்டியா கூட்டணி மற்றும் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த முழுஅடைப்பு போராட்டம் காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

முழு அடைப்பு காரணமாக புதுச்சேரியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. போராட்டத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் மாணவ-மாணவிகள் அச்சமின்றி தேர்வு எழுதலாம் எனவும் அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

12 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

13 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

13 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

14 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

14 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

14 hours ago

This website uses cookies.