கோவை : இளம்பெண்ணை லாட்ஜுக்கு அழைத்து சென்று நெருக்கமாக இருந்த புகைப்படத்த காட்டி பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கோவை செட்டிபாளையத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண், அதே பகுதி உள்ள தனியார் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்சில் வேலைக்கு செல்வது வழக்கம்.
அப்போது பஸ் டிரைவர் அப்துல் ஹமீது (வயது 26) என்பவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு ஜாலியாக சென்று வந்துள்ளனர்.
தொடர்ந்து அப்துல்ஹமீது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை உக்கடத்தில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்போது இருவரும் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படத்தை அப்துல் ஹமீது செல்போனில் எடுத்துள்ளார். தொடர்ந்து இளம்பெண்ணை மிரட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்துல் ஹமீதிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். பின்னர் அவர் குறித்து விசாரித்தபோது அப்துல் ஹமீது ஏற்கனவே திருமணமானவர் என்றும் அதனை மறைத்து தன்னுடன் பழகி ஏமாற்றியது தெரிய வந்தது.
இதுகுறித்து இளம்பெண் அப்துல் ஹமீதிடம் கேட்டபோது அவர், நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் கோவை செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குனியமுத்தூர் செந்தமிழ் நகரை சேர்ந்த அப்துல் ஹமீதை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.