தமிழகம்

விஜயின் முக்கிய குற்றச்சாட்டு.. தீயாக பரவிய தகவல்.. ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுப்பு!

எந்த அரசியல் அமைப்புகளுடனும் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரந்தூர் சென்றார்.

அப்போது, மக்கள் மத்தியில் பேசிய அவர், “டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டைத் தானே பரந்தூர் பிரச்னையிலும் எடுத்திருக்க வேண்டும். அரிட்டாபட்டி மக்கள் எப்படியோ, அப்படித்தானே பரந்தூர் மக்களும்.

அப்படித்தானே அரசு யோசிக்க வேண்டும். ஆனால், அரசு அப்படி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை? ஏனென்றால், விமான நிலையத்தையும் தாண்டி இந்தத் திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது. அதனை மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில், பரந்தூரில் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு நிலம் இருப்பதாகவும், இந்த நிறுவனம் அரசியல் தொடர்புகளுடன் இருப்பதாகவும் தகவல் பரப்பப்பட்டது. இந்த நிலையில், இந்த பரவிய தகவல்களுக்கு, ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க: அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!

அதில், “இந்தியாவில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளராக ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பரந்துாரில் எங்களுக்கு பெரிய அளவில் நிலம் இருப்பதாக, சிலர் அரசியல் காரணங்களுக்காக தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், எங்கள் நிறுவனத்துக்கு எந்த நிலமும் இல்லை. எந்த அரசியல் அமைப்புகளுடனும் எங்களுக்கு எந்த தொடர்பு இல்லை” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

4 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

4 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

5 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

5 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

5 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

5 hours ago

This website uses cookies.