எந்த அரசியல் அமைப்புகளுடனும் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரந்தூர் சென்றார்.
அப்போது, மக்கள் மத்தியில் பேசிய அவர், “டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டைத் தானே பரந்தூர் பிரச்னையிலும் எடுத்திருக்க வேண்டும். அரிட்டாபட்டி மக்கள் எப்படியோ, அப்படித்தானே பரந்தூர் மக்களும்.
அப்படித்தானே அரசு யோசிக்க வேண்டும். ஆனால், அரசு அப்படி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை? ஏனென்றால், விமான நிலையத்தையும் தாண்டி இந்தத் திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது. அதனை மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில், பரந்தூரில் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு நிலம் இருப்பதாகவும், இந்த நிறுவனம் அரசியல் தொடர்புகளுடன் இருப்பதாகவும் தகவல் பரப்பப்பட்டது. இந்த நிலையில், இந்த பரவிய தகவல்களுக்கு, ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!
அதில், “இந்தியாவில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளராக ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பரந்துாரில் எங்களுக்கு பெரிய அளவில் நிலம் இருப்பதாக, சிலர் அரசியல் காரணங்களுக்காக தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, பரந்துாரில் புதிய விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், எங்கள் நிறுவனத்துக்கு எந்த நிலமும் இல்லை. எந்த அரசியல் அமைப்புகளுடனும் எங்களுக்கு எந்த தொடர்பு இல்லை” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
This website uses cookies.