வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை குறி வைத்து நடைபெற்று வரும் சூதாட்டத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.இந்நிலையில் அப்பகுதியில் கோவிலுக்கு வரும் பக்தர்களை குறிவைத்து சூதாட்டம் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இப்பகுதியில் சுற்றித் திரியும் சூதாட்ட கும்பல் ஒன்று மூன்று கேரம் போர்டு ஸ்டைகர்களில் ஒரு ஸ்டைகரில் மட்டும் எதேனும் ஒரு நம்பரை ஒட்டி விட்டு மூன்று ஸ்டைகர் காயின்களையும் மாற்றி மாற்றி சுற்றுகின்றனர்.
பின்னர் எந்த ஸ்டைகரில் நம்பர் உள்ளது என யூகித்து அதன் மீது பணத்தை கட்ட வேண்டும். சரியாகக் கூறினால் கட்டிய பணத்திற்கு இரட்டிப்பாக தருவதாக ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
இதில் குறிப்பாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சூதாட்ட கும்பலை சேர்ந்த ஒருவரே பக்தர் போல் நடித்து முதலில் பணத்தைக் கட்டி வெற்றி பெறுகிறார். இதனைப் பார்த்த இதர பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆசைப்பட்டு இந்த விளையாட்டில் பணத்தைக் கட்டி விளையாடுகின்றனர்.
முதலில் வெற்றி பெற வைத்து விட்டு அதிக பணம் கட்டும் போது ஏமாற்றப்படுகின்றனர். இவர்கள் கூகுள் பே, போன் பே போன்ற இணைய வழி மூலமாகவும் பணத்தை செலுத்தும் வசதியையும் வைத்துள்ளனர்.
தற்போது இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதியில் பல நாட்களாக இந்த சூதாட்டம் நடைபெற்று வருவதாகவும் இதற்கு காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.