வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை குறி வைத்து நடைபெற்று வரும் சூதாட்டத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.இந்நிலையில் அப்பகுதியில் கோவிலுக்கு வரும் பக்தர்களை குறிவைத்து சூதாட்டம் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இப்பகுதியில் சுற்றித் திரியும் சூதாட்ட கும்பல் ஒன்று மூன்று கேரம் போர்டு ஸ்டைகர்களில் ஒரு ஸ்டைகரில் மட்டும் எதேனும் ஒரு நம்பரை ஒட்டி விட்டு மூன்று ஸ்டைகர் காயின்களையும் மாற்றி மாற்றி சுற்றுகின்றனர்.
பின்னர் எந்த ஸ்டைகரில் நம்பர் உள்ளது என யூகித்து அதன் மீது பணத்தை கட்ட வேண்டும். சரியாகக் கூறினால் கட்டிய பணத்திற்கு இரட்டிப்பாக தருவதாக ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
இதில் குறிப்பாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சூதாட்ட கும்பலை சேர்ந்த ஒருவரே பக்தர் போல் நடித்து முதலில் பணத்தைக் கட்டி வெற்றி பெறுகிறார். இதனைப் பார்த்த இதர பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆசைப்பட்டு இந்த விளையாட்டில் பணத்தைக் கட்டி விளையாடுகின்றனர்.
முதலில் வெற்றி பெற வைத்து விட்டு அதிக பணம் கட்டும் போது ஏமாற்றப்படுகின்றனர். இவர்கள் கூகுள் பே, போன் பே போன்ற இணைய வழி மூலமாகவும் பணத்தை செலுத்தும் வசதியையும் வைத்துள்ளனர்.
தற்போது இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதியில் பல நாட்களாக இந்த சூதாட்டம் நடைபெற்று வருவதாகவும் இதற்கு காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.