Categories: தமிழகம்

கோவையில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் பெங்களூருவில் சிக்கிய கும்பல் : 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது!!

கோவை : மூதாட்டியை குறிவைத்து பிளாஸ்திரி சுற்றி கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த ம் கும்பலை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் கைது செய்தனர்.

சூலூரில் மூதாட்டியை பிளாஸ்டிரியால் சுற்றி நகையை கொள்ளையடித்த சம்பவத்தில் பவாரியா கொள்ளையர்களை போன்று நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த இளம் திருடர்களை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஒரே வாரத்தில் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சரோஜினி என்ற 82 வயது மூதாட்டியை கடந்த ஒரு வாரத்திற்கு முன் நான்கு பவுன் நகை கொள்ளை அடிப்பதற்காக வாய், கை, கால்களில் பிளாஸ்திரி சுற்றி மர்மநபர்கள் கொன்று கொள்ளையடித்து சென்றனர்.

இதில் மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் சூலூர் காவல்துறையிடம் தெரிவித்து நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

மூதாட்டியின் வீட்டுக்கு அருகே உள்ள சிசிடிவி ஒன்றில் இளைஞர்கள் நடந்து சென்றது காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் தொடர்ந்து 200 சிசிடிவிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இளைஞர்கள் என்பதும் அவர்கள் பெங்களூருக்கு தப்பி சென்று இருப்பதும் தெரியவந்தது.

உடனடியாக பெங்களூர் விரைந்த காவல்துறையினர் அங்கே பதுங்கி இருந்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அபினேஷ், வசந்த் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை இவர்கள் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாகர்கோவிலில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து மூவரிடம் விசாரணை நடத்தியதில் மூதாட்டியை நகைக்காக வாய் கை கால்களில் பிளாஸ்திரியை சுற்றி கொலை செய்து கொள்ளையடித்து சென்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்களா என அந்த மாவட்ட காவல்துறையினரும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூதாட்டியை கொலை செய்து விட்டு சென்ற இளைஞர்களை ஒரே வாரத்தில் சிசிடிவி உதவியால் கைது செய்திருப்பதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கசிந்த தகவல்..அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…

49 minutes ago

என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…

நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…

50 minutes ago

அந்த தியாகி யார்? டாஸ்மாக் ஊழல் தொடர்பாக கவனத்தை ஈர்த்த அதிமுக எம்எல்ஏக்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…

2 hours ago

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

2 days ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

2 days ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

2 days ago

This website uses cookies.