Categories: தமிழகம்

சலூன் கடைக்கு சென்றவரை பின் தொடர்ந்த கும்பல் : கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட்டம்.. போலீசார் விசாரணை!!

திண்டுக்கல் : சலூன் கடையில் முடி வெட்ட வந்த நபரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் சவேரியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண் குமார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பணியை முடித்து விட்டு இன்று மாலை வீடு திரும்பினார்.

வீட்டில் சலூன் கடைக்கு செல்வதாக தெரிவித்து விட்டு பேகம்பூர் பகுதியில் உள்ள பிரின்ஸ் சலூன் கடையில் முடி வெட்டுவதற்காக கடையின் உள்ளே நுழைந்தபோது அருண்குமாரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கூர்மையான கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இதில் அருண்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதனை பார்த்த கடை உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அருண்குமாரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அருண்குமார் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் முன்விரோதம் காரணமாக இந்த செயல் நடந்து உள்ளதா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திண்டுக்கல் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

6 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

7 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

8 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

8 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

9 hours ago

This website uses cookies.