Categories: தமிழகம்

தெரு தெருவாக பட்டாகத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றிய கும்பல்… மக்களை அச்சுறுத்தி அட்டூழியம் : சினிமாவை மிஞ்சிய சென்னை சம்பவம்!!

சென்னை : தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் புகைப்படத்துடன் உலா வந்த மர்மநபர்கள் கையில் பட்டாகத்தியுடன் பொதுமக்களை விரட்டும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவில் தெருவில் உள்ளவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.

இவர் வீட்டின் அருகே இரவு நின்று கொண்டிருந்த போது, ஹெல்மெட் அணிந்த 6 இருசக்கர வாகனங்களில் வந்த 12 பேர் கொண்ட மர்மகும்பல், ஒரு புகைப்படத்தை காட்டி இந்த நபரை தெரியுமா என கேட்டு அவரை தாக்கி தப்பினர்.

மேலும் தாங்கள் கையில் கொண்டு வந்த பட்டகாத்தியை சாலையில் தேய்த்துக்கொண்டு சினிமா காட்சிகளில் வருவது போல அட்டூழியம் செய்தனர். வெளியின் நின்ற மக்கள் கும்பலை கண்டு தெறித்து வீட்டுக்குள் தஞ்சமடைந்தனர்.

இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இருசக்கர வாகனம் இயக்கும் போது ஏற்பட்ட மோதல் என தெரியவந்துள்ளது.

அந்த கும்பலை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, இதே பகுதியை சேர்ந்த லிங்கா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று மோதியுள்ளார்.

இதனால் இருதரப்பினருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் லிங்காவை தேடி விக்னேஷ் தனது நண்பர்களுடன் முத்தாளம்மன் தெருவில் சுற்றியுள்ளனர். மேலும் லிங்காவின் போட்டோவை சமூக வலைதளம் மூலம் சலவை போட்டு எடுத்து, இவர் தான் லிங்காவா என அப்பகுதி மக்களிடம் கேட்டு தேடியுள்ளனர்.

6 பைக்குகளில் 12 பேர் வந்த அந்த கும்பல், கிருஷ்ணமூர்த்தியிடம் புகைப்படத்தை காட்டி கேட்டதும், அவர் தெரியாது என கூறியதால் ஆத்திரத்தில் அவரை பட்டாகத்தியால் தாக்கியதும், பொதுமக்கல் அலறியடித்து கொண்டு வீட்டுக்ளு தஞ்சமடைந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சென்னையில் தொடர்ந்து பல இடங்களில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தலைநகரம் கொலைநகரமாக மாறும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

10 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

10 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

11 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

11 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

12 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

12 hours ago

This website uses cookies.