Categories: தமிழகம்

காரில் வந்திறங்கிய களவாணி கும்பல்…வீட்டின் முன் நிறுத்தியிருந்த காஸ்ட்லி பைக் அபேஸ்: சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்த உரிமையாளர்..!!

வேலூர்: குடியாத்தம் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை காரில் வந்த மர்ம கும்பல் திருடிச் செல்லும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ஆர்.எஸ்.ரோடு திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது இருசக்கர வாகத்தை வீட்டின் முன் நிறுத்தியிருந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலையில் வீட்டிற்கு வெளியே சென்று பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த சந்தோஷ் உடனடியாக அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது காரில் வந்த ஒரு கும்பல் காரில் இருந்து இறங்கி சர்வசாதாரணமாக வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்வது தெரியவந்தது.

இது தொடர்பாக குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் சந்தோஷ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குடியாத்தம் பகுதியில் வீடு, கடைகள், வணிக வளாகங்கள் முன்பு நிறுத்தி வைக்கப்படும் இரு சக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவம் தொடர்ந்து வருவதாகவும், இதனால் ரோந்து பணியை அதிகரித்து, சிசிடிவி கேமிராக்களை அதிகம் பொறுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

l

UpdateNews360 Rajesh

Recent Posts

ஒரே இடத்தில் திமுக – பாஜகவினர் மாறி மாறி கோஷம்.. பரபரப்பில் சென்னை!

சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…

9 minutes ago

அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!

பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…

1 hour ago

மும்மொழிக்கு ஆதரவு.. பயத்தில் நிலை தடுமாறும் முதலமைச்சர் : அண்ணாமலை அட்டாக்!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…

2 hours ago

என்னைய மறந்துட்டாங்க…புலம்பும் விஜய் பட வில்லன்..!

இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…

2 hours ago

’நான் அப்பாவக் கொன்னுட்டேன்’.. ஆட்டோ ஓட்டுநரால் வெளியான பகீர் சம்பவம்!

சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…

2 hours ago

உயிருக்கு போராடும் துள்ளுவதோ இளமை பட நடிகர்.. உதவி செய்வாரா தனுஷ்?

துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…

3 hours ago

This website uses cookies.