திண்டுக்கல் மாவட்டம் உண்டாரப்பட்டி அருகே உள்ள ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோசுவா (வயது 28), விவசாயி. இவருக்கு கிருஷ்டி என்ற மனைவியும் 6 மற்றும் 3 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் எட்வின் ஜோஸ்வாவின் மாமியார் திண்டுக்கல் அருகே உள்ள முத்தழகுபட்டியில் தனது வீட்டின் அருகே உள்ள புறம்போக்கு இடத்தில் ஷெட் அமைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அதே பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் புறம்போக்கு இடத்தில் ஷெட் அமைத்ததால், எனக்கு நீ பணம் கொடுக்க வேண்டும் என்று மேரியை மிரட்டி வந்துள்ளார். ஆனால் மேரி அலெக்சுக்கு பணம் தர மறுத்துள்ளார். மேலும் அலெக்ஸ் பணம் கேட்டு மேரிக்கு போன் செய்த போது, மேரி தனது மருமகனான எட்வின் ஜோஸ்வாவிடம் செல்போனை கொடுத்து பேச சொல்லி உள்ளார்.
அப்போது செல்போனில் பேசிய அலெக்சுக்கும் எட்வின் ஜோஸ்வாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஜோஸ்வா தனது நண்பர்களுடன் உண்டார்பட்டிக்கு வந்துள்ளார். அதன் பிறகு எட்வின் ஜோஸ்வாவை சந்தன வர்த்தினி ஆற்றுப்பாலம் அருகே வருமாறு கூறியுள்ளனர்.
அங்கே சென்ற எட்வின் ஜோஸ்வாவிற்கும், அலெக்ஸ் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் அலெக்ஸ் தரப்பினர் ஜோஸ் எட்வின் ஜோஸ்வாவை கடுமையாக தாக்கி விட்டு, அவரின் செல்போனை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எட்வின் ஜோஸ்வாவை அவரது உறவினர்கள் மீட்டு திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த எட்வின் ஜோஸ்வா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து எட்வின் ஜோஸ்வாவின் மனைவி கிருஷ்டி கொடுத்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.