Categories: தமிழகம்

கண்டெய்னர் லாரிகளை மறித்து பணம் பறிக்கும் கும்பல்.. நெடுஞ்சாலை திருடர்களை வளைத்த போலீஸ்.!!!

கண்டெய்னர் லாரிகளை மறித்து பணம் பறிக்கும் கும்பல்.. நெடுஞ்சாலை திருடர்களை வளைத்த போலீஸ்.!!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி கேரள மாநிலம் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த கண்டைனர் லாரியை பாலக்காடு பகுதியை சேர்ந்த நூர்முகமது என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த லாரியில் கிளீனர் ராஜேஷ் உள்ளிட்ட மூன்று பேர் இருந்துள்ளனர்.

இந்த கண்டைனர் லாரி உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி காப்புக்காடு அருகில் சென்று கொண்டிருந்தபோது அங்கு கார் ஒன்று வைத்துக் கொண்டு சாலை ஓரம் நின்று கொண்டிருந்த ஏழு பேர் கொண்ட கும்பல் உதவி கேட்பது போல் லாரியை மறித்துள்ளனர்.

டிரைவர் லாரியை நிறுத்திய போது அந்த கும்பல் டிரைவர் மற்றும் கிளீனரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துள்ளனர். அப்போது டிரைவரின் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து சுற்றி வளைத்து நான்கு பேரை பிடித்தனர்.

அப்போது அங்கிருந்து இவர்களுடன் வந்த மூன்று பேர் காரில் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட நான்கு பேரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் போல் இருந்ததால் பொதுமக்கள் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் பிடிபட்ட நான்கு பேர் மற்றும் லாரி டிரைவர் நூர்முகமது, கிளீனர் ராஜேஷ் உள்ளிட்டவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
பிடிப்பட்டவர்கள் லாரியை வழிமறித்து வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்தவர்களா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பு நோய் ஏற்படுத்தி உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

41 minutes ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

45 minutes ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

1 hour ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

2 hours ago

திமுகதான் நம்பர் ஒன்.. அடித்துக் கூறும் அண்ணாமலை.. மறுக்கும் அமைச்சர்.. என்ன நடக்கிறது?

மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…

2 hours ago

பள்ளிக்குச் சென்ற குழந்தைகள்.. தாயைக் கொன்று தப்பிய தந்தை.. என்ன நடந்தது?

கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…

3 hours ago

This website uses cookies.