Categories: தமிழகம்

மேற்கு தொடர்ச்சி மலையில் கஞ்சா பயிர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது : டிஜிபி சைலேந்திரபாபு பெருமிதம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு காவல்துறையின் இயக்குனர் சைலேந்திரபாபு வருகை தந்தார்.

பின்னர் அலுவலகத்தில் திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் கொள்ளை வழக்கு, செல்போன் திருட்டு போன்ற வழக்கில் குற்றவாளிகள் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடியே 50 லட்சம் மதிப்புள்ள பணம் நகைகள் செல்போன்கள் ஆகியவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

பின்னர் திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் மற்றும் போலீசார் என 68 பேருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் தேனி மாவட்ட காவல்துறை சார்பாக ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் :- திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் கொள்ளை போன வழக்கில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற வெளி மாநிலங்களுக்கு காவல்துறையினர் சென்று வெளிநாட்டு குற்றவாளி உட்பட ஏராளமான குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து பணம், நகை, செல்போன் என ஒரு கோடி 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த காலங்களில் அதிக அளவில் கஞ்சா செடிகள் பயிர் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது காவல் துறையினரின் துரித நடவடிக்கையின் காரணமாக கஞ்சா செடி பயிர் செய்வது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது ஒரிசா மற்றும் ஆந்திராவிலிருந்து கஞ்சா விற்பனைக்காக தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. திண்டுக்கல் தேனி மாவட்டத்திலும் 80 சதவீதகத்திற்கும் மேல் கஞ்சா விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை தடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக கஞ்சா பயன்படுத்தி வந்தவர்களில் ஒரு சிலர் மருந்து கடையில் மருந்து, மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர். அதனை தடுப்பதற்கான கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் போதை போதை பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் போதை பொருள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

13 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

14 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

14 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

15 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

15 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

15 hours ago

This website uses cookies.