காரில் வலம் வரும் கஞ்சா வியாபாரி : செல்போன் மூலம் இளைஞர்களுக்கு விற்பனை.. தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதை தடுக்க காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு தூத்துக்குடி கதிர்வேல் நகர் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகம் இருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அப்போது கதிர்வேல் நகர் பகுதியில் காரில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கதிர்வேல் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.
மணிகண்டன் செல்போன் மூலம் கஞ்சா வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு காரில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது
இதைத் தொடர்ந்து மணிகண்டனை கைது செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் மணிகண்டனிடம் இருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்திய ஆறு செல்போன்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர் மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 8000 பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்
மேலும் இவரது செல்போன் மூலம் கஞ்சா விற்பனை எவ்வாறு செய்து வருகிறார் வெளி மாநிலத்தைச் சேர்ந்த கஞ்சா கும்பலுடன் தொடர்பு உள்ளதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.