மன்சூர் அலிகான் மகன் துக்ளக் அலிகான் சிக்கிய கஞ்சா வழக்கில், போதைப் பொருட்களை பாங்காங்கில் இருந்து கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.
சென்னை: சமீபத்தில், சென்னை அடுத்த முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதைப் பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, இது தொடர்பாக 5 கல்லூரி மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர், சென்னை மண்ணடியைச் சேர்ந்த 2 பேர் இதே வழக்கில் போலீசாரிடம் சிக்கினர். அதேபோல், கடந்த அக்டோபர் 30ஆம் தேதி காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த 2 மாணவர்களையும் இதே வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
பின்னர், இந்த மாணவர்களின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது, கஞ்சா வியாபாரிகளை போலீசார் கைது செய்வதைத் தொடங்கினர். அப்போது பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் (26) மொபைல் நம்பரும் இருந்து உள்ளது. இதனையடுத்து, அலிகான் துக்ளைக்கை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: விஜய் படத்தில் கமிட் ஆனதால் அடித்தது லக்… பிரபல நடிகருக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!
இதனையடுத்து, மேலும் 3 பேர் இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இவ்வாறு விலை உயர்ந்த கஞ்சா தொடர்பான வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும், மன்சூர் அலிகானின் மகன் போதைப்பொருள் பயன்படுத்தியதோடு, அதனை வாங்கி சப்ளை செய்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாங்காங்கில் இருந்து கடத்தல்: இவ்வாறு மன்சூர் அலிகான் மகன், அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்ட வழக்கில் கஞ்சா பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் டார்க்வெப், விபிஎன் மூலம் பாங்காக்கில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு, சென்னைக்கு உயர்தர கஞ்சாவை வரவழைத்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல், பாங்காக்கில் இருந்து கப்பல் மற்றும் விமானம் மூலம் கூரியர் (Courier) வழியாக கஞ்சாவை வாங்கி உள்ளனர். ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்கிய ஒரு கிராம் கஞ்சாவை, அந்தக் கும்பல் 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்துள்ளது. இதற்காக வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளில் நெட்வொர்க் அமைத்து செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.