பூண்டு இல்லாமல் சமையல் செய்ய கத்துக்கோங்க.. தங்கத்துடன் போட்டி போடும் விலை : இல்லத்தரசிகள் ஷாக்!
வரத்து குறைவு எதிரொலியாக கோவையில் ஒரு கிலோ பூண்டு ரூபாய் 540க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பூண்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத்தில் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு அதிக அளவில் பூண்டு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களாக பூண்டு விலை குறைவாக இருந்தது அதிகபட்சமாக ஒரு கிலோ ரூபாய் 274 வரை விற்பனையானது.
இந்த நிலையில் பூண்டு வரத்து மிகவும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த மார்க்கெட்டுக்கு 100 டன்னுக்கு மேல் பூண்டு வந்தது. அது தற்போது 40 டன் ஆக குறைந்துவிட்டது.
இதன் காரணமாக பூண்டு விலை மலவளவென உயர்ந்தது மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூபாய் 450 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை ஆர் எஸ் புரம் உழவர் சந்தையில் நேற்று கிலோ 375 வரை விற்பனையானது.
இதனால் மளிகை கடையில் சில்லறை விற்பனையாக கிலோவுக்கு 540க்கு விற்பனையானது பூண்டு விலை திடீரென்று உயர்ந்துள்ளதால் இல்ல தரிசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து வியாபாரி கூறும் போது கோவைக்கு நீலகிரி மற்றும் வடமாநிலங்களில் இருந்து பூண்டு கொண்டு வரப்படுகிறது. அதன் வரத்து கடந்த ஒரு வாரமாக மிகவும் குறைந்துவிட்டது.
இதற்கு மழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கூறப்படுகிறது, முப்பது கிலோ கொண்ட மூட்டையாக வரும் பூண்டை சிறிய வியாபாரிகள் வாங்கிச் சென்று பிரித்து காய வைக்கும் போது மூட்டைக்கு 4 கிலோ வரை கழிவு சென்றுவிடும். இதனால் அவர்கள் கடையில் விற்கும் போது திரு 540க்கு விற்பனை செய்யப்படுகிறார்கள்.
கோவை மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகளில் 100 கிராம் பூண்டு 55 வரை விட்டது புதுப்பூண்டு இன்னும் வரவில்லை இது வந்தால் தான் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று அவர்கள் கூறினார் பூண்டு விலை உயர்வால் கடைகளில் பாக்கெட் ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் விற்பனை அதிகரித்து உள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.