மதுரை : மதுரையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 70 வயது மூதாட்டி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாப்பாளையம் அன்சாரி நகர் 6-வது தெருவை சேர்ந்த கான் மனைவி சாய்னாபேகம் வயது 60 என்பவர் இன்று வீட்டின் சமையலறையில் டீ போட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சமையல் சிலிண்டர் வெடித்தது. இதில் சாய்னா பேகத்திற்கு படுகாயம் ஏற்பட்டதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சாய்னா பேகத்தின் மருமகன் சாதிக்பாட்சா, எஸ்.எஸ். காலனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் விசாரணை நடத்தினார். இதில் சாய்னா பேகம் சிலிண்டரில் கியாசை சிறிது நேரம் திறந்து விட்டு உள்ளார்.அதன் பிறகு பற்ற வைக்க முயன்றார். அப்போது தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து எஸ்.எஸ். காலனி போலீசார் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.