கன்னியாகுமரி : நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டீக்கடை ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் எட்டு பேர் படுகாயம் அடைந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் டீக்கடை ஒன்றில் கடந்த 17ஆம் தேதி அன்று காலை வடை போட்டு கொண்டு இருக்கும்போது திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்தது.
இதில் எட்டு பேர் படுகாயம் அடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிற்ச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தீ விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த காட்சியில், கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீப்பழம்புகள் சிதறி வெளியே வந்த போது அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிய காட்சியும் ஒரு சிலருக்கு ஆடைகளில் தீ பற்றிய காட்சியும் அதில் உள்ளது.
மேலும் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஏற்கனவே நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் அவர்களில் மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.