கன்னியாகுமரி : நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டீக்கடை ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் எட்டு பேர் படுகாயம் அடைந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் டீக்கடை ஒன்றில் கடந்த 17ஆம் தேதி அன்று காலை வடை போட்டு கொண்டு இருக்கும்போது திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்தது.
இதில் எட்டு பேர் படுகாயம் அடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிற்ச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தீ விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த காட்சியில், கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீப்பழம்புகள் சிதறி வெளியே வந்த போது அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிய காட்சியும் ஒரு சிலருக்கு ஆடைகளில் தீ பற்றிய காட்சியும் அதில் உள்ளது.
மேலும் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஏற்கனவே நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் அவர்களில் மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
This website uses cookies.