கோவையில் உள்ள மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், 500 மீட்டர் சுற்றளவுக்கு உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், அவிநாசி சாலை, அண்ணா மேம்பாலத்தில் இன்று (ஜன.03) அதிகாலை கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வாயுக் கசிவு தற்போது, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்புத் துறையினர், போலீசார் தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, வாயுக்கசி்வு அச்சத்தால், லாரி கவிழ்ந்த 500 மீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கோவைக்கு கேஸ் ஏற்றிக் கொண்டு வந்த டேங்கர் லாரி, கோவை கணபதி பகுதியில் உள்ள குடோனுக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தலை குப்புற கவிழ்ந்தது.
பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், முதற்கட்டமாக தண்ணீர் ஊற்றி வாயுக்கசிவை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் உள்பட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ராம் சரண் இத்தன கெட்டப்பா…பிரம்மாண்டமாக வெளிவந்த கேம் சேஞ்சர் ட்ரைலர்..!
மேலும், மேம்பாலத்தில் லாரி கவிழ்ந்துள்ளதால் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை போக்குவரத்து போலீசார் சரி செய்து, மாற்றுப் பாதைகளில் வாகனங்களைத் திருப்பிவிடுகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
This website uses cookies.