வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 49 மற்றும் 43 வயது சகோதரர்கள். இவர்கள் வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்து கொண்டனர். அண்ணன், தம்பி தம்பதியினருக்கு தலா 2 மகன்கள் உள்ளனர்.
சகோதரர்கள் கடந்த 2018-ம் ஆண்டு குடும்பத்துடன் சவுதி அரேபியாவில் தங்கியிருந்து வேலை செய்தனர். அந்த சமயத்தில் சகோதரர்கள் தங்களின் 12, 7 மற்றும் 6 வயது மகன்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனை அறிந்த சிறுவர்களின் தாயார் உடனடியாக அவர்களை அழைத்து கொண்டு இந்தியாவிற்கு திரும்பினர்.
இதையும் படியுங்க: குளிப்பதை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரர்.. பாஜக பிரமுகர் சிக்கியது எப்படி?
இந்த நிலையில் சில மாதங்களுக்கு பின்னர் இந்தியாவிற்கு வந்த சிறுவர்களின் 2 தந்தையும் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதற்கு சிறுவர்களின் மற்றொரு சித்தப்பா மற்றும் பாட்டியும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து சிறுவர்களின் தாயார் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில் நீதிபதி சிவக்குமார் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் முதல் மற்றும் 2-வது குற்றவாளிகளான அண்ணன், தம்பிக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1½ லட்சம் அபராதமும், 3 மற்றும் 4-வது குற்றவாளியான சித்தப்பா, பாட்டிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அண்ணன், தம்பி இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.