மேட்டுப்பாளையத்தில் நகர்நல மையத்தின் முன்பு மக்களுக்கு அளிக்கும் மாத்திரைகள் குப்பையில் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆனைக்கார தெரு பகுதியில் நகராட்சி நகர் நல மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி வந்து தங்களின் உடல் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகி சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். மேலும், இந்த நகர் நல மையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த நகர் நல மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் நல்ல மாத்திரைகள் மற்றும் காலாவதியான மாத்திரைகள் என அனைத்தும் ஒரே இடத்தில் அங்குள்ள குப்பை தொட்டி பகுதியில் கிடந்தை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏழை மக்களுக்காக செயல்படும் இந்த மருத்துவமனையில் வரிப்பணத்தை வீணடிக்கும் விதமாக நல்ல மாத்திரைகளை குப்பையில் கொட்டியது பெரும் அதிர்ச்சனை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மேட்டுப்பாளையம் நகராட்சி நகர் நல மையத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குப்பை அள்ளும் வண்டியில் மருந்துகள் கொண்டு வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது நோயாளிகள் உபயோகப்படுத்தும் மாத்திரைகள் குப்பையில் கிடப்பது மக்களிடையே அத்திருப்பித்து ஏற்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை தலையிட்டு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் மக்கள் கோரிக்கையாக உள்ளது.
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியப் போக்கால் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.