Categories: தமிழகம்

270 அடி நீளம் கொண்ட காற்றாலை விசிறியை ஏற்றி சென்ற ராட்சத லாரி கவிழ்ந்து விபத்து : நூலிழையில் உயிர்தப்பிய ஓட்டுநர்!!

திண்டுக்கல் : சின்னாளபட்டி அருகே 270 அடி நீளம் கொண்ட காற்றாலை விசிறியை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 3 மணிக்கு நேரமாக போக்குவரத்து நீடித்தது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி, நாகர்கோவல் பகுதிக்கு தினசரி காற்றாலை மின் தயாரிப்புக்கான பாகங்கள் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 270 அடி நீளம் கொண்ட காற்றாலை விசிறிகள் லாரிக்கு ஒன்று வீதமாக 3 லாரிகள் ஏற்றிக் கொண்டு சென்றது.

லாரி மற்றும் விசிறியின் மொத்த நீளம் 300 அடி என்பதால் வளைவுகளில் லாரியை திருப்புவதற்காக அந்த லாரியின் பின்பக்கத்தில் சுமார் 180 அடி தூரத்தில் ஒரு பகுதியில் ஆப்ரேட்டர் அறை இருக்கும் அதில் ஆபரேட்டர் ஒருவர் அமர்ந்து முன் பக்க டயர்கள் திரும்புவதை பார்த்து ரிமோட் மூலம் பின்னால் உள்ள டயரை இயக்குவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று 12 மணியளவில் அந்த 3 லாரிகளும் திண்டுக்கல்லை அடுத்து மதுரை செல்லும் சாலையில் சின்னாளப்பட்டி அருகே உள்ள அம்பாத்துரை ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள திருப்பத்தில் சென்ற போது லாரி டிரைவர் ராமநாதன் லாரியை திருப்பிய போது பின்னால் இருந்த ஆபரேட்டரான உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சூரத் என்பவர் ரிமோட் மூலம் பின்பக்க டயரை திருப்ப முயன்றார்.

ஆனால் ரிமோட் வேலை செய்யாமல் போனதால் 300 அடி நீளம் கொண்ட காற்றாலை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் லாரி இன்ஜின் பகுதி ரோட்டிலேயே கவிழ்ந்தது. காற்றாலை விசிறியும் பின்னால் இருந்த ஆபரேட்டர் பகுதியியும் சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

லாரி கவிழ்ந்த போது அப்பகுதியில் பயங்கர சப்தம் கேட்டது. இந்த விபத்தில் டிரைவரும், ஆபரேட்டரும் காயமின்றி உயர் தப்பினர். சம்பவ இடத்திற்கு அம்பாத்துரை போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

இதனையடுத்து நெடுஞ்சாலை துறையினர், டோல்கேட் நிர்வாகம் காற்றாலை மின்விசிறி நிறுவனமான என்.டி.சி, இணைந்து கவிழ்ந்த லாரி மற்றும் காற்றாலை விசிறியை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

2-ராட்சத கிரேன் மூவம் முதலில் பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை கடும் பிரயத்தனத்திற்க்கு பிறகு தூக்கி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, சாய்ந்து கிடந்த காற்றாலை விசிறியையும் கிரேன் மூலம் தூக்கி அதே லாரியில் பொருத்தி காற்றாலை விசிறி தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இணைந்து ஒன்னறை டன் எடை கொண்ட காற்றாலை விசிறியை லாரியுடன் தூக்கி நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த மீட்பு பணியால் சுமார் 3-மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, 2-கிலோ மீட்டர் தூரம் ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்து பாதிப்பின்றி வாகனங்கள் சென்றன. அம்பாத்துரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

6 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

6 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

7 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

7 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

8 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

8 hours ago

This website uses cookies.