உத்தரப் பிரதேசத்தில், ஆன்லைன் மூலம் காதலித்து ஏமாற்ற முயன்ற நபருக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரியா. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தீரஜ் என்ற நபரை ஆன்லைன் செயலி மூலமாகச் சந்தித்துள்ளார். பின்னர், இவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விட இருவரும் காதலித்து வந்துவுள்ளனர். ஆனால், பிரியாவிடம் தீரஜ் தனது பாலியல் ஆசைக்காகவே பழகியதாகக் கூறப்படுகிறது.
எனவே, அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தீரஜுக்கு இல்லை எனவும் சொல்லப்படுகிறது. ஆனால், பிரியாவோ தீரஜ் தான் தனது வாழ்க்கை என்று நம்பி இருந்துள்ளார். எனவே, அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பல முறை கெஞ்சி பார்த்துள்ளார்.
ஆனால் தீரஜ் அதற்கு சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரியா, தீரஜை இறுதியாக நேரில் சந்தித்து உள்ளார். அப்போது, ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து அவரை கொல்லவும் முயற்சி செய்துள்ளார். பின்னர் அவர் மயங்கி விழுந்த நிலையில், தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து அவரைத் தாக்கியும் இருக்கிறார்.
இதையும் படிங்க: தளபதி69-ல் இணைந்த பிரபல டான்ஸ் மாஸ்டர்…எந்த ரோலில் நடிக்கிறார் தெரியுமா..!
இது அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வர, அவர்கள் தீரஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தொடர்ந்து, தீரஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரியாவை கைது செய்துள்ளனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.