தலைதீபாவளி கொண்டாடிய பெண் மீது கணவன் கண்முன்னே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற பெண்ணின் சித்தப்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி – பவித்ரா. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவன் வீட்டில் புதுமண தம்பதிகளாக தலை தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென வீட்டிற்கு வந்த பவித்ராவின் சித்தப்பாவான கார்த்திக் (42), இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பவித்ரா மீது மண்ணெண்ணெய் ஊற்றி எறிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்து பாலாஜி மற்றும் அக்கம்பக்கத்தினர் கார்த்திக்-யை தடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தில் பவித்ராவிற்கு லேசான தீ காயங்கள் ஏற்படவே, சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, சம்பவம் குறித்து எஸ்எஸ் காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
This website uses cookies.