நெல்லை ; கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு கொண்டு வந்த பறை இசை கருவிகளை எடுத்துச் சென்ற மாணவியை, பேருந்தில் இடமில்லை எனக் கூறி இசைக்கருவிகளுடன் பாதியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதா. நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார். கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா கலை நிகழ்ச்சிக்காக தனது ஊரான சிவகங்கையில் இருந்து பறை இசை கருவிகளை கல்லூரிக்கு கொண்டு வந்துள்ளார். அப்போது அரசு பேருந்தில் தான் வந்துள்ளார். கல்லூரியிலும் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக முடிந்துள்ளது.
அதனை தொடர்ந்து, மாலையில் சொந்த ஊருக்கு பறையிசை கருவிகளை கொண்டு செல்வதற்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் மதுரை செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்தில் ஓட்டுநர் அனுமதித்தாலும், பேருந்து பயணித்துக் கொண்டிருக்கும் போது டிக்கெட் கேட்க வந்த நடத்துனர், மாணவியை தவறாக பேசி பறை இசை கருவிக்கு பேருந்தில் இடமில்லை எனக்கூறி பாதி வழியில் இறங்கச் சொல்லி உள்ளார்.
உடன் வந்த மற்ற பயணிகள் வற்புறுத்தல் காரணமாக பறை இசைக்கருவிகளுடன் சேர்த்து மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு சென்றுள்ளார் நடத்துனர்.
பாதி வழியில் இறங்கி நின்று தனியாக அழுது கொண்டிருந்த மாணவியின் நிலை பரிதாபகரமாக இருந்தது. உடனடியாக மாணவி நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போக்குவரத்து கழக அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் மாணவியை ஏற்றிச் செல்ல பேருந்துகள் எதுவும் வரவில்லை. அரை மணி நேரத்திற்கும் மேலாக வந்த பேருந்துகளை ஒவ்வொன்றாக நிறுத்தி மனைவியை பேருந்து ஏற்றி விட முயற்சித்த செய்தியாளர்களின் முயற்சி இறுதியாக பலித்தது.
நெல்லையில் இருந்து கோயம்புத்தூர் சென்ற அரசு பேருந்து நடத்துனர் பாஸ்கர், செய்தியாளர்களின் மூலம் மாணவியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு மதுரையில் மாணவியை குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விடுவதாக கூறி கொண்டு வந்த பறை இசை கருவிகளுடன் மாணவியை பேருந்தில் ஏற்றிச் சென்றார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.