Categories: தமிழகம்

தைரியம் இருந்தால் கலால் துறையை உதயநிதிக்கு கொடுங்க : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சி.வி.சண்முகம் சவால்!!

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் வேண்டும், திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேட்டினை கண்டித்து மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ள மதுவினால் உயிரிழப்பு ஏற்படுவது மற்றும் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்யப்படுவதை கண்டித்தும் 15 அடி உயரமுள்ள மதுபாட்டிலில் 10 ரூபாயுடன் ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தின் நடுவே பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளதாகவும்,அமைச்சர் செந்தில் பாலாஜி என்றால் யாருக்கும் தெரியாது பத்து ரூபாய் அமைச்சர் என்றால் எல்லாருக்கும் தெரியும் என்றும் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த அமைச்சரை நீக்காமல் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் திமுக அரசு வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

சென்னையில் ஒரு நாள் மழைக்கே வெள்ளம் சூழ்ந்துள்ளது அதனை பற்றி கவலை படாமல் முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூரில் தனது தந்தைக்கு கோட்டத்தை திறந்து வைப்பதாகவும், தமிழக முதலமைச்சர் செயலிழந்து தடுமாறி கொண்டிருக்கும் அவர் மத்திய அரசை கண்டு நடுங்கி கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

பணம் வாங்கி கொண்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த செந்தில் பாலாஜி மீது ஸ்டாலின் தலைமையில் உள்ள காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை அமலாக்க துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தமிழக குற்றப்பிரிவு போலீசார் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

தவறு செய்ததால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அப்போதைய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்காமல் பழி வாங்கும் நடவடிக்கை என தெரிவிப்பதாகவும் எந்நாளும் அவரை காப்பாற்ற முடியாது என சிவி சண்முகம் சாடினார்.

இருதயத்தில் 3 அடைப்புகள் ஏற்பட்டு 8 நாட்கள் ஆகிய பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்படுவது விசாரனையை காலதாமதம் ஏற்படுத்த வேண்டும் ஜாமின் பெற வேண்டும் என்பதால் தான் என்றும் சுகாதார துறை அமைச்சர் ம. சுப்பிரமணியன் அவரும் ஒரு சீட்டிங் பேர் வழி என்று குற்றஞ்சாட்டினார்.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக சுகாதார் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளிக்கிறார் முதலில் அவர் தான் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கலால் வரி செலுத்தாமல் ஆறாயிரம் உரிமம் இல்லாத டாஸ்மாக் கடைகள் நடத்தி ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் தனக்கு ஆபத்து வரும் என்றால் எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் காவு கொடுத்து விடுவார் என கூறினார்.

அண்ணா நகர் ரமேஷ், சாதிக்பாஷாவின் நிலைமை தான் செந்தில்பாலாஜிக்கு ஏற்படும் செந்தில்பாலாஜி பாவம் அவர் எங்களோடு இருந்தவர் என்பதால் இதனை கூறுவதாகவும் இல்லாத நோயிக்கு சிகிச்சை பெற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி ஓடி ஓடி வாக்கு சேகரிக்க முடியாது என்றும் பின்னர் முதலமைச்சர் குடும்பத்தினர் காபாற்ற மாட்டார்கள் என தெரிவித்தார்.

இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் முதலமைச்சர் தனது தந்தைக்கு பேனா அமைப்பது,கோட்டம் அமைப்பதை விட வேற எதுவும் செய்யவில்லை என்றும் கலால் துறையை ஏன் தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் முதலமைச்சர் வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

1 day ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

1 day ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

1 day ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

1 day ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

1 day ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

1 day ago

This website uses cookies.