Categories: தமிழகம்

குற்றால வெள்ளத்தில் சிக்கி பலியான வ.உ.சி கொள்ளுப் பேரன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குக : சரத்குமார் வலியுறுத்தல்!

குற்றால வெள்ளத்தில் சிக்கி பலியான வ.உ.சி கொள்ளுப் பேரன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குக : சரத்குமார் வலியுறுத்தல்!

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் கடந்த 17ஆம் தேதி பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அப்போது, அருவியில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர். இருப்பினும், வெள்ளப்பெருக்கில் அஸ்வின் என்ற சிறுவன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

தொடர்ந்து, கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த அஸ்வின், சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழனுமான வஉசியின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியானது.

அதே நேரத்தில் சிறுவன் அஸ்வின் இறந்த சோகத்தில் அவரது குடும்பத்தினர் இருப்பதால் இதுகுறித்து பேச அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும் வீட்டுக்கு வேறு யாரும் வர வேண்டாம் எனவும் கூறப்பட்டது.

இந்த தகவல் உண்மையே, அஸ்வின் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். தற்போது விடுமுறை என்பதால் தென்காசியில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் அஸ்வின், சுதந்திர போராட்ட வீரும் கப்பலோட்டிய தமிழனுமான வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்தி ஆறுமுகச் செல்வியின் அக்கா செண்பகவள்ளியின் பேரன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: இந்திய மாணவர்கள் 3 பேர் பலி.. அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழும் சோகம்..!!

இதனிடையே தென்காசி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், நடிகருமான சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு துர்திஷ்டவசமாக 17 வயது சிறுவன் அஸ்வின் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. அச்சிறுவன் சுதந்திர போராட்ட வீரரான வ.உ.சிதம்பரனாரின் வாரிசு என்ற செய்தி மேலும் வருத்தமளிக்கிறது. அச்சிறுவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

8 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

9 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

10 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

11 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

12 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

13 hours ago

This website uses cookies.