நில அளவீடு செய்து வரைபடம் வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த டி.பி.பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலு என்பவர் தனது நிலத்தை அளவீடு செய்து வரைபடம் வழங்க வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இதனிடையே நிலத்தை அளவீடு செய்து வரைபடம் வழங்க வட்டார துணை நில அளவிட்டார் (சர்வேயர்) 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனிடைய வேலு இது குறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வேலு நில அளவிட்டாலர் விஜய் கிருஷ்ணனிடம் பணம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் நில சர்வேயர் விஜய கிருஷ்ணனுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கலைவாணன் ( 27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 15,000 ருபாய் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயர் லஞ்சம் வாங்கி போலீசில் சிக்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.