Categories: தமிழகம்

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் பாதுகாப்பு கொடுங்க.. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது : ஜி.கே வாசன் தடலாடி!!!

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் பாதுகாப்பு கொடுங்க.. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது : ஜி.கே வாசன் தடலாடி!!!

கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்த ஜி.கே.வாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய ஜி.கே.வாசன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாகியுள்ளது. குடியரசு தலைவர் சென்னை வரக்கூடிய சில மணி நேரங்களில் அதுவும் அவர் தங்க கூடிய இடத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளதால் சாதாரண மனிதர்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்ற அச்சம் இருக்கிறது.

குறிப்பாக தமிழகத்தினுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது எனவும் மேலும் உளவுத்துறையின் செயல்பாடு கேள்விக்குறியாக உள்ளது.

மக்களின் அச்சத்தை போக்க வேண்டும். அந்த கடமை அரசுக்கு உண்டு இந்த சம்பவத்தை ஆழமாக விசாரிக்க வேண்டும். அதன் நோக்கம் என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை என தெரிவித்த அவர், ஆளுநருக்கும் ஆளுநர் மாளிகைக்கும் முதலில் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் முக்கிய பிரச்சனை என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

பொய்யான தகவல்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து விசாரித்து ஒரு காலக்கெடுவுக்குள் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்றும், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் கடின உழைப்பால் உயர்ந்து மற்ற மாநில மாணவர்களுக்கு சவாலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதற்கேற்றவாறு நீட் தேர்வு சதவீதம் உயர்ந்து வருகிறது.

தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் பெற்றோர்களையும் மாணவர்களையும் மீண்டும் நீட் தேர்வு என்ற பெயரில் குழப்ப வேண்டாம் கையெழுத்து இயக்கம் நடத்துவது என்பது மாணவர்கள் படிப்பில் இடையூறு ஏற்படுத்துகின்ற செயல்.

பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்கள் கல்வி பயிலும் போது அதற்கு இடையூறாக இருக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்துவது தேவையற்றது.

திமுகவிற்கு உண்மையில் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்று நினைத்தால் சட்ட ரீதியாக செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும் அரசியல் ரீதியாக எடுத்துக்கொண்டு மாணவர்கள் பெற்றோர்களை குழப்புவது ஒருபோது சரியல்ல.

திமுக அரசு கொடுத்த வாக்குகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற காரணத்தினால் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் வளரக்கூடாது அதை முடக்க வேண்டும் என்ற நிலையில் எதிர்க்கட்சிகளில் கொடி கம்பங்களை அகற்றி வருகிறது.

சிறுபான்மையின் மக்கள் விடுதலை செய்யக்கூடிய நிலையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது. மக்கள் மன்றத்தில் ஒரு பேச்சும் நீதிமன்றத்தில் ஒரு பேச்சும் என்பது அவர்களுடைய உண்மையான முகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

8 minutes ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

2 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

2 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

3 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

3 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

4 hours ago

This website uses cookies.