GoBackUdhayanidhi.. ட்விட்டரில் உதயநிதிக்கு எதிராக பதிவிட்ட பாஜக மாவட்ட செயலாளர் அதிரடி கைது!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திமுகவினர் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு கிருஷ்ணகிரி வந்தடைந்த அவரை கோ பேக் உதயநிதி ஸ்டாலின் என்ற வாசகங்கள் உடன் சமூக வலைதளங்களில் பாஜக மாவட்ட தலைவர் எம்.சி.முருகேசன் என்பவர் பகிர்ந்ததாக தெரிகிறது.
இது குறித்து திமுகவினர் பாஜக பிரமுகரின் மீது பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த சமூக வலைத்தளங்களில் பரப்பியவர் பர்கூர் அடுத்த BRG.மாதேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த எம்சி.முருகேசன் என்பதும் அவர் மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருவதும் தெரிய வந்தது.
பின்னர் அவரை பர்கூர் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த பாஜக மாவட்ட தலைவர் சிவ பிரகாஷ் மாவட்ட பொருளாளர் கவியரசு மற்றும் பாஜக நிர்வாகிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பர்கூர் காவல் நிலையத்தில் குவிந்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட முருகேசன் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் பாஜகவினர் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.