திருப்பத்தூர் ; வாணியம்பாடி அருகே சில்லறை வாங்குவது போல் நடித்து ரூ.6 லட்சம் தங்கம் அபேஸ் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மம்பேட்டை காவல் நிலையம் அருகே கடந்த 10 ஆண்டுகளாக அடகுக் கடை நடத்தி வருபவர் கோவிந்தசாமி. இவரது மனைவி இந்துமதி. இவர் கடந்த மே மாதம் 28ஆம் தேதி அன்று அடகுக் கடையில் இருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், 500 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்குவது போல் இந்துமதியை திசை திருப்பியுள்ளனர்.
அப்போது, கடையில் இருந்த சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 104 கிராம் தங்கத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். உடனடியாக இது குறித்த சிசிடிவி காட்சிகளுடன் திம்மாம்பேட்டை காவல் நிலையத்திற்குச் சென்று இந்துமதி புகார் அளித்துள்ளார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இப்புகார் மீது எந்த ஒரு விசாரணையும் செய்யாமல், 5 மாத காலமாக முதல் தகவல் அறிக்கையும் வழக்கும் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது இந்த கொள்ளை சம்பவம் குறித்தும், திம்மாம்பேட்டை போலீசார் அலட்சியமாக செயல்படுவதாகவும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்துமதி புகார் அளித்துள்ளார்.
மேலும், இந்த திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.