திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கோட்ட ஆணையர் டாக்டர் அபிஷேக், உதவி கோட்ட ஆணையர் பிரமோத்நாயர், ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார் திருச்சி ரயில்வே சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னையில் இருந்து திருச்சி வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த மதுரையை சேர்ந்த லட்சுமணன் (34) என்பவர் சந்தேகத்துக்கு இடமாக நடந்து கொண்டதை கண்ட காவல்துறை அதிகாரிகள் சதீஷ், இளையராஜா, சசிகுமார்
ஆகியோர் விசாரணை மேற்கொண்ட போது அவர் தனது பையில் வைத்திருந்த, பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் 15லட்சம ரொக்க பணத்தை கைப்பற்றினர்.
தொடர்ந்து வணிகவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மதுரையில் உள்ள ஒரு நகைக்கடையில் பணிபுரிவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கொண்டு வந்த 2.795கிலோ, தங்கத்தை கைப்பற்றினர். அதன் மதிப்பு ஒரு கோடியே 89 லட்சத்து 621 ரூபாய் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
15 லட்சம் ரொக்கத்தையும் கைப்பற்றினர். போலியானது என்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டனர். தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.