Categories: தமிழகம்

3 மாணவிகளை ரகசியமாக சுற்றுலா அழைத்துச் சென்ற ஆசிரியர்… அறை எடுத்து பாலியல் தொந்தரவு… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசுப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றும் ரமேஷ் என்ற வேதியல் ஆசிரியர். இவர் கடந்த மாதம் ஏழாம் தேதி அதே பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்கள் என 5 பேரை பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு தெரியாமல் கொடைக்கானலுக்கு தனது காரில் சுற்றுலாவுக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அங்கு இரண்டு அறைகள் வாடகைக்கு எடுத்து அதில் ஒரு அறையில் ஆசிரியரும் மற்றொரு அறையில் மாணவ, மாணவிகளையும் அவர் தங்க வைத்துள்ளார். பின்னர் அங்கு ஒரு மாணவியரிடம் ஆசிரியர் ரமேஷ் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் தனது காரில் சுற்றுலா அழைத்துச் சென்ற மாணவ மாணவிகளை மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வந்த ஆசிரியர், இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்றும், கொடைக்கானலில் எடுத்த புகைப்படங்களை அழித்து விட வேண்டும் என்றும் மாணவ, மாணவிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், சுற்றுலா சென்ற விவரம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்தால் செய்முறை தேர்வு மதிப்பெண்களை குறைத்து விடுவதாக மாணவ, மாணவிகளை ஆசிரியர் ரமேஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதன் பின்னரும் சம்பந்தப்பட்ட ஒரு மாணவியிடம் மட்டும் உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வேதியியல் ஆய்வக அறையில் தனிமையில் இருந்ததாகவும், அதனை சில மாணவர்கள் பார்த்துள்ளதாகவும், இதன் பின்னர் இந்த பிரச்சனை பெற்றோருக்கு தெரிய வந்ததன் அடிப்படையில், பள்ளி நிர்வாக மூலம் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட சமூக நல அலுவலர் கோகுல பிரியாமற்றும் கல்வித் துறை அதிகாரிகள் கடந்த ஒன்பதாம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டனர். இந்த குற்ற சம்பவங்கள் தெரிய வந்ததையடுத்து, இது குறித்து அவர் மீது கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் என் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவ, மாணவியரை பாதுகாக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவமும், பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு தெரியாமல் ஐந்து மாணவ மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று, அதன் பின்பு அது குறித்து வெளியே சொல்லக் கூடாது என மிரட்டிய சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

உங்க வேலைய மட்டும் பாருங்க…ரசிகர்களுக்கு ரூல்ஸ் போட்ட இயக்குனர் எச்.வினோத்.!

ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…

26 minutes ago

முதலிரவில் மனைவி சொன்ன ரகசியம்.. ஜூஸில் விஷம்.. சிகிச்சையில் கணவர்!

கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…

33 minutes ago

தரமான சம்பவம்…விஜய் ரெக்கார்டை தூக்கி வீசிய ‘குட் பேட் அக்லி’.!

ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…

1 hour ago

ஆண் நண்பரை கட்டிப்பிடித்து போட்டோ… ரச்சிதா மகாலட்சுமியால் ரசிகர்கள் ஷாக்!

சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…

1 hour ago

18 நாட்கள் செல்போனில் சிக்கிய பேராசிரியர்.. முக்கிய நபர் கைதானது எப்படி?

உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

1 hour ago

This website uses cookies.