புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று விட்டு திரும்பிய போது, அரசுப் பேருந்து மோதியதில், டாட்டா ஏஸி வாகனத்தில் சென்ற இரு காளைகள் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதியில் நேற்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை மட்டுமல்லாது திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திலிருந்து காளைகள் பங்கு பெற்றுள்ளன.
இதேபோன்று விராலிமலை மற்றும் மணப்பாறையில் இருந்து டாட்டா ஏசி வாகனத்தில் ஆறு பேர் தங்களது மூன்று ஜல்லிக்கட்டு காளைகளோடு வந்தனர். இவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் தங்களது காளைகளை அவிழ்த்து விட்டு விட்டு, மீண்டும் டாட்டா ஏசி வாகனத்தில் மணப்பாறைக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது டாட்டா ஏஸ் வாகனம் திருவரங்குளம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டாட்டா ஏஸ் வாகனத்தில் இருந்து மணப்பாறை அருகே செவலூரைச் சேர்ந்த மதியழகன் (26), புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரைச் சேர்ந்த விக்கி (22) இரண்டு பேர் மற்றும் டாடா ஏஸ் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டாட்டா ஏஸ் வாகனத்தில் இருந்த மூன்று காளைகளில் இரண்டு காளைகள் உயிரிழந்தன. ஒரு காலை மட்டும் சிகிச்சைக்காக கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர். டாட்டா ஏஸ் வாகனத்தில் வந்த மீதமுள்ள நான்கு பேர் மட்டுமல்லாது பேருந்தில் வந்த ஓட்டுநர் உள்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வட்டார போக்குவரத்து அலுவர்கள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.