சூலூர் அருகே சாலையில் திரும்ப முயன்ற பள்ளி வேன் மீது அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் பள்ளி பேருந்து 12 மாணவர்களுடன் திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தது. கண்ணம்பாளையம் பகுதியில் பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டு சூலூர் செல்வதற்காக ராவத்தூர் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற போது, கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி அதிவேகமாக வந்த அரசு பேருந்து பள்ளி வேன் மீது மோதியது.
இதில் பள்ளி வேன் ஓட்டுநர் ராமராஜ், உதவியாளர் காந்திமதி உட்பட மாணவர்கள் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினர். வேனில் பயணித்த கௌசிக் நிவாஸ் என்ற மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் கௌஷிக் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து காரணமாக திருச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, பள்ளி வேன் மீது அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.