சூலூர் அருகே சாலையில் திரும்ப முயன்ற பள்ளி வேன் மீது அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் பள்ளி பேருந்து 12 மாணவர்களுடன் திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தது. கண்ணம்பாளையம் பகுதியில் பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டு சூலூர் செல்வதற்காக ராவத்தூர் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற போது, கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி அதிவேகமாக வந்த அரசு பேருந்து பள்ளி வேன் மீது மோதியது.
இதில் பள்ளி வேன் ஓட்டுநர் ராமராஜ், உதவியாளர் காந்திமதி உட்பட மாணவர்கள் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினர். வேனில் பயணித்த கௌசிக் நிவாஸ் என்ற மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் கௌஷிக் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து காரணமாக திருச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, பள்ளி வேன் மீது அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தேமுதிக பாராட்டிய நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி…
பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
This website uses cookies.