விழுப்புரம் : படிக்கட்டில் தொங்கி வந்த மாணவர்களை படிக்கட்டில் இருந்து மேலே ஏறும்படி கூறிய ஓட்டுநரை, மாணவர்கள் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தாதாம்பாளையம் கிராமத்திற்குச் சென்ற நகர அரசு பேருந்தில் மாணவர்கள் காந்திசிலை, மாதாகோயில் உள்ளிட்ட பேருந்து நிறுத்தத்தில் அதிக அளவில் ஏறி பயணித்துள்ளனர்.
பேருந்திற்கு உள்ளே இடமிருந்தும் படிக்கட்டிலேயே தொங்கிக்கொண்டு வந்த மாணவர்களிடம் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் உள்ளே வரகூறியும் வராமல், கூட்டமாக படியிலேயே தொடர்ந்து ஆபத்தான முறையில் தொங்கிய படி பயணித்துள்ளனர். இதனால், ஓட்டுநர் மாணவர்களை படியிலிருந்து மேலே ஏறும்படி கூறும் பொழுது, மாணவர்கள் ஓட்டுநரை மிரட்டியுள்ளனர்.
இதனால், பயந்து போன ஓட்டுநர் தாலுக்கா காவல் நிலையம் எதிரே பேருந்தை நடுரோட்டில் பயணிகளுடன் நிறுத்தி விட்டு நடத்துனருடன் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். பேருந்து 15 நிமிடத்திற்கு மேலாக நடுரோட்டிலேயே பயணிகளுடன் நின்றது.
பின்னர், தாலுக்கா காவல் நிலைய போலீசார் மாணவர்களை கண்டித்து உள்ளே ஏறச்சொல்லி பாதுகாப்புக்காக காவல் துறையினர் பேருந்திலேயே பயணித்ததால் பேருந்து இயக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
This website uses cookies.