வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் தானாக ஓடிய அரசு பேருந்து கல்லூரி மாணவிகள் பயணிகள் அதிஸ்ட்டவசமாக காயமின்றி தப்பியதால் பரபரப்பு.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் நகரின் மையப்பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தில் நிலக்கோட்டை நோக்கி செல்வதற்காக அரசு நகரப் பேருந்து நிலையம் விநாயகர் கோவில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த,பேருந்தை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இருவரும் அருகாமையில் உள்ள ஒருதேநீர் கடையில் டீ குடிக்க சென்றுவிட்டனர்.
அப்போது நிலக்கோட்டை மகளிர் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் பேருந்து திடீரென தானாக ஸ்டார்ட் ஆகி குதித்து குதித்து நகரத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவிகள் அலறியடித்து சிதரி ஓடினர்.
சுதாரித்த ஓட்டுநர் மின்னல் வேகத்தில் ஓடி வந்து மேலும் பேருந்து நகர விடாமல் நிறுத்தினார். இதனால் பெரும் அரசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அரசு பேருந்து தானாக நகரும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.