தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் திடீரென பழுதாகி 3வது மாடியில் பாதியில் நின்றதால் நோயாளிகளின் உறவினர்கள் சிக்கி தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளியை சங்கரன்கோவில் பகுதியில் சேர்ந்த 4 பெண்கள் பார்க்க வந்துள்ளனர். அப்போது, நோயாளி மூன்றாவது மாடியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நான்கு பெண்களும் லிப்ட் வழியாக பயணித்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக லிப்ட் பழுதாகி திடீரென 3வது மாடியில் நின்றதால் நான்கு பெண்களும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பெயரில் அரசு மருத்துவமனைக்கு வந்த தீயணைப்புத் துறையினர் லிப்டில் சிக்கி தவித்த நான்கு பெண்களையும் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்.
லிப்ட் பழுதாகி பாதியில் நின்றதால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.